சமீபத்தில் ஒரு
கல்லூரியின் தொழில்நுட்ப மாநாட்டிற்கு சென்றிருந்தேன் . அங்கு பலதரப்பட்ட தொழில் விற்பன்னர்கள் ,வல்லுநர்கள்
, முனைவர் , முதுகலை பட்டம் பெற்றவர்கள் என பலரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது . அதில் அனைவரிடமும்
ஒரு விஷயம் பொதுவாக காணப்பட்டது . அது அவர்கள் தங்கள் திறமைகளை , தொழிலை மேம்படுத்த உழைக்கிறார்கள்
, ஆனால் பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை . முதல் பாகத்தில் சொல்லப்பட்ட உதாரணம் போல வருமானத்தை பெருக்க செலுத்தும்
கவனம் செலவிலும் ,சேமிப்பிலும் , முதலீட்டிலும் பலர் செய்வதில்லை .
எனக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்த விஷயம் , மாதம் பல
'ல' கரங்களை , சம்பளமாக பெரும் ஒருவர் பல விதமான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் ,பொருளாதார
சிக்கலில் இருந்து மீண்டு வர விரும்புவதும் கூறியதுதான் .
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் என்றார் வள்ளுவர் பெருந்தகை
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். இந்த சிந்தனையை நம் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்தார் .
இன்றைய இளைஞர்களின் பொருளாதார போக்கு சற்று வித்தியாசமாக இருப்பதை காண
முடிகிறது . அது 'instant gratification' எனும் உடனடி மனநிறைவு . சேமித்து வாங்கும்
போக்கு தற்போது , கடன் வாங்கி , கடன் அடைக்கும்
மனநிலைக்கு மாறிவிட்டது . இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அடிப்படை விஷயமாக
'உடனடி மனநிறைவு' எண்ணமே மேலோங்கி நிற்கிறது .
இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது
. அதன் நோக்கம் , நமது வீட்டின் பொருளாதாரம்
எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்தவே .
பட்டியலில் ,செலவு
பலருக்கு நீண்.........டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. அது அவர்களுக்கே தெரியாமல் நுழைந்த வாழ்க்கை முறையின்
வெளிப்பாடு.
முதலில் பட்டியலில் உள்ள செலவுகளை பார்ப்போம் .
உக்தி 1:
பட்டியலை இரண்டு பிரிவுகளாக பிரித்து ,சுருக்கவும் .
முதலாவது ' அத்தியாவசிய செலவுகள் - இது தவிர்க்கவே முடியாத
செலவுகள் , இரண்டாவது - குறைத்துக்கொள்ள கூடிய
செலவுகள் .
முதல் பிரிவு வருமானத்தில் எத்தனை சதவிகிதம் , இரண்டாவது
எத்தனை சதவிகிதம் ? முதல் பிரிவைவிட இரண்டாம்
பிரிவு அதிகமிருந்தால் நிச்சயமாக கூறலாம் நமது பொருளாதாரம் சரிய துவங்குகிறது என்று
.மறு பரிசீலனை செய்யவும் .
உக்தி 2:
மாத்தி யோசி :
ஏற்கனவே பல கடன்கள் வாங்கியாச்சு ,மருத்துவ செலவு அதிகம்
, குடும்பம் பெரியதாகி விட்டது, பல செலவுகள்
அத்தியாவசிய செலவாகிவிட்டது , இப்பொழுது என்ன
செய்வது ?
கடனா / சேமிப்பா
? சொந்த வாகனமா / போக்குவரத்து துறை வாகனங்களா
? வீடு உணவா / வெளி உணவா ? ஒரே கடை மாளிகையா / பல கடைகளா ? என மாற்றி யோசிக்கவும்
.
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை :
சூழ்நிலை காரணமாக பலர் கூட்டு குடும்பங்களிலிருந்து தனி
குடும்பமாக உருவெடுத்துள்னர் . அனுபவமின்மை , நேரமின்மை காரணமாக அணைத்து உறுப்பினர்களும்
பேசுவது அரிதாகிவருகிறது . . சிறிய ஆலோசனைகளும் பெரிய மாற்றத்தை வரவழைக்க வாய்ப்புள்ளது
. எப்பொழுதுமே இரண்டு மூளைகளின் ஆற்றல் , ஒன்றை
விட அதிகம் . முயற்சி செய்யலாம் .
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன்
செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
இந்த பொருள் தரும் குறள் எது , கூறும் விஷயம் என்ன ? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்
.

