Wednesday, 3 August 2022

Manage your finance part 1


                      பணம் பதினொன்றும் செய்யும்

காசு ,பணம் ,துட்டு ,மணி  இதை உச்சரிக்காமல் யாரும் இருக்கமுடியாது . ஒரு அறிஞர் சரியாகத்தான் சொன்னார்  “பணம் கத்தியை  போன்றது . சரியாய் பயன்படுத்தினால் மட்டுமே நம்மை காக்கும் “.

அதெல்லாம் சரி  'சம்பாதிப்பதற்கே பாடாய்  இருக்கு, செலவு வரவை மீறி இருக்கு ' இதில்  எப்படி  சேமிப்பது  ? எப்படி பயன்படுத்துவது  என்ற உள்ளத்தின் குமுறல்களுக்கு  ஆறுதல் தரவே இந்த பதிவு.

ஒரு சின்ன உதாரணம் . உங்கள் ஆண்டு வருமானம், செலவு இவ்வளவு என்று பட்டென்று கூறுங்கள் பார்ப்போம் . பலருக்கு வருமானம் தெரியும் செலவு தெரியாது .

முதலில் செய்யவ வேண்டியவை   எது ? செய்யக்கூடாதவை எது ?

பணத்தை பற்றிய புரிதல் நம்மிடம் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவேண்டும் .

ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் என்று வைத்துக்கொள்வோம் , செலவு 4 லட்சம். என்ன செய்வது ?

வரவு - சம்பளம் மட்டும். செலவு ? அது  தெரியாமலே பல வழியில் வருகிறது.

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்ப வேண்டுமென்றால் ,முதலில் நீர் வேண்டும் , பாத்திரமும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும் . அதை போலவே நம் கையில் பணம் வேண்டுமென்றால்  செலவை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் . அதாவது ஓட்டையை அடைக்க வேண்டும் .

இதில் முதல் அடியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் . ஒரு  ஆண்டுக்கு  என்ன என்ன செலவுகள் ,எதிர் பார்த்த , எதிர் பாராவிதமான வரும் செலவுகளை கணக்கிடவேண்டும்.

எதற்கு ஒரு ஆண்டிற்கு பார்க்கவேண்டும் ?

இன்சூரன்ஸ் பிரீமியம் -வாகனம், ஆயுள் காப்பீடு ,உடல் நலக்காப்பீடு , போன்ற செலவுகள்  ஆண்டிற்கு  கணக்கிடப்படுகிறது .

மின் கட்டணம் - இரண்டு மாதத்திற்கொருமுறை  கணக்கிடப்படுகிறது .

இதே போல , சில நிறுவனங்களின் ஊக்கத்தொகை , போனஸ் (பங்கு ஊதியம்), முதலீட்டிற்கான வட்டி போன்ற வரவுகளும் ஆண்டிற்கே கணக்கிடப்படுகிறது .

 

நாம் மாத வரவு செலவு கணக்குகளை எழுதும்போது அவற்றை கணக்கிடாமல்போக வாய்ப்பு உள்ளது .மேலும் இது ஒவ்வொரு மாதமும் மாறுபடும்போது நம்மால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை .

இதற்காகவே ஆண்டிற்கான கணக்கை எழுதவேண்டும் .

 ஏன் ஆயுள் காப்பீடு செலவு கணக்கில் வருகிறது , சில நிறுவனங்கள் நம் ஆயுள் காப்பீடு தொகையை திரும்ப அளிக்கிறார்களே , இதற்கு பதில் இந்த கட்டுரையின் பிற பாகத்தில் கூறுகிறேன்  

ஒரு நல்ல பட்டியலில் என்ன இருக்க வேண்டும்

கணக்கிடக்கூடிய வரவு- செலவுகள் :

வரவு:

ஆண்டு வருமானம் :  மாத  சம்பளதாரர்களுக்கு  இது சுலபம் .

நிலையில்லா வருமானம் உள்ளவர்கள் ,கடந்த  ஆண்டு வருமானத்தை கணக்கில் கொள்ளலாம் .

சம்பளம் தவிர வேறு வருமானம் உள்ளவர்கள் , வாடகை மூலம் வருமானம் , விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் , பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் .வருமானம் ,முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி  போன்றவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் .

செலவு :

அத்தியாவசிய செலவுகளான மளிகை ,பால், வீட்டு வாடகை- (  வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் ),  மாதாந்திர தவணை தொகை - EMI , எரிபொருள் - வாயு (காஸ் ),பெட்ரோல் , டீசல், மருத்துவச்செலவு  , கல்வி கட்டணம் ( தேவை பட்டால் கணக்கில் கொள்ளவும் ), பண்டிகை கொண்டாட்டங்கள் , போக்குவரத்து , கேபிள் , இன்டர்நெட் ,மொபைல் கட்டணம் , வீட்டு பணியாளர்கள் சம்பளம் ,இது தவிர  எதிர்பாராமல் நடக்கும் செலவுகள் : வாகன பழுது பார்க்க ஏற்படும் செலவு  , மருத்துவ செலவு , ஹோட்டல் , சுற்றுலா , என எதையும்  விடாமல்  பட்டியல்  தயாரிக்க  வேண்டும் .

சரி தயாரித்தாகிவிட்டது  அடுத்து  என்ன ?

 அடுத்த பாகத்தில்

No comments:

Post a Comment

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...