பணம் பதினொன்றும் செய்யும்
காசு
,பணம் ,துட்டு ,மணி இதை உச்சரிக்காமல் யாரும்
இருக்கமுடியாது . ஒரு அறிஞர் சரியாகத்தான் சொன்னார் “பணம் கத்தியை
போன்றது . சரியாய் பயன்படுத்தினால் மட்டுமே நம்மை காக்கும் “.
அதெல்லாம்
சரி 'சம்பாதிப்பதற்கே பாடாய் இருக்கு, செலவு வரவை மீறி இருக்கு ' இதில் எப்படி
சேமிப்பது ? எப்படி பயன்படுத்துவது என்ற உள்ளத்தின் குமுறல்களுக்கு ஆறுதல் தரவே இந்த பதிவு.
ஒரு
சின்ன உதாரணம் . உங்கள் ஆண்டு வருமானம், செலவு இவ்வளவு என்று பட்டென்று கூறுங்கள் பார்ப்போம்
. பலருக்கு வருமானம் தெரியும் செலவு தெரியாது .
முதலில்
செய்யவ வேண்டியவை எது ? செய்யக்கூடாதவை எது
?
பணத்தை
பற்றிய புரிதல் நம்மிடம் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவேண்டும் .
ஆண்டுக்கு
3 லட்சம் வருமானம் என்று வைத்துக்கொள்வோம் , செலவு 4 லட்சம். என்ன செய்வது ?
வரவு
- சம்பளம் மட்டும். செலவு ? அது தெரியாமலே
பல வழியில் வருகிறது.
ஒரு
பாத்திரத்தில் நீர் நிரப்ப வேண்டுமென்றால் ,முதலில் நீர் வேண்டும் , பாத்திரமும் ஓட்டை
இல்லாமல் இருக்க வேண்டும் . அதை போலவே நம் கையில் பணம் வேண்டுமென்றால் செலவை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் . அதாவது
ஓட்டையை அடைக்க வேண்டும் .
இதில்
முதல் அடியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் . ஒரு
ஆண்டுக்கு என்ன என்ன செலவுகள் ,எதிர்
பார்த்த , எதிர் பாராவிதமான வரும் செலவுகளை கணக்கிடவேண்டும்.
எதற்கு
ஒரு ஆண்டிற்கு பார்க்கவேண்டும் ?
இன்சூரன்ஸ்
பிரீமியம் -வாகனம், ஆயுள் காப்பீடு ,உடல் நலக்காப்பீடு , போன்ற செலவுகள் ஆண்டிற்கு
கணக்கிடப்படுகிறது .
மின்
கட்டணம் - இரண்டு மாதத்திற்கொருமுறை கணக்கிடப்படுகிறது
.
இதே
போல , சில நிறுவனங்களின் ஊக்கத்தொகை , போனஸ் (பங்கு ஊதியம்), முதலீட்டிற்கான வட்டி
போன்ற வரவுகளும் ஆண்டிற்கே கணக்கிடப்படுகிறது .
நாம்
மாத வரவு செலவு கணக்குகளை எழுதும்போது அவற்றை கணக்கிடாமல்போக வாய்ப்பு உள்ளது .மேலும்
இது ஒவ்வொரு மாதமும் மாறுபடும்போது நம்மால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை
.
இதற்காகவே
ஆண்டிற்கான கணக்கை எழுதவேண்டும் .
ஏன் ஆயுள் காப்பீடு செலவு கணக்கில் வருகிறது , சில
நிறுவனங்கள் நம் ஆயுள் காப்பீடு தொகையை திரும்ப அளிக்கிறார்களே , இதற்கு பதில் இந்த
கட்டுரையின் பிற பாகத்தில் கூறுகிறேன்
ஒரு
நல்ல பட்டியலில் என்ன இருக்க வேண்டும்
கணக்கிடக்கூடிய
வரவு- செலவுகள் :
வரவு:
ஆண்டு வருமானம் : மாத சம்பளதாரர்களுக்கு இது சுலபம் .
நிலையில்லா
வருமானம் உள்ளவர்கள் ,கடந்த ஆண்டு வருமானத்தை
கணக்கில் கொள்ளலாம் .
சம்பளம்
தவிர வேறு வருமானம் உள்ளவர்கள் , வாடகை மூலம் வருமானம் , விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் , பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் .வருமானம் ,முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி போன்றவைகளையும்
கணக்கில் கொள்ள வேண்டும் .
செலவு
:
அத்தியாவசிய
செலவுகளான மளிகை ,பால், வீட்டு வாடகை- ( வாடகை
வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் ), மாதாந்திர
தவணை தொகை - EMI , எரிபொருள் - வாயு (காஸ் ),பெட்ரோல் , டீசல், மருத்துவச்செலவு , கல்வி
கட்டணம் ( தேவை பட்டால் கணக்கில் கொள்ளவும் ), பண்டிகை கொண்டாட்டங்கள் , போக்குவரத்து , கேபிள் , இன்டர்நெட் ,மொபைல் கட்டணம் , வீட்டு பணியாளர்கள் சம்பளம் ,இது தவிர எதிர்பாராமல்
நடக்கும் செலவுகள் : வாகன பழுது பார்க்க ஏற்படும் செலவு , மருத்துவ
செலவு , ஹோட்டல் , சுற்றுலா , என எதையும்
விடாமல் பட்டியல் தயாரிக்க வேண்டும்
.
சரி
தயாரித்தாகிவிட்டது அடுத்து என்ன
?
அடுத்த
பாகத்தில் …

No comments:
Post a Comment