Friday, 18 November 2022

Manage your wealth - Part 8 stock market


 

பங்கு சந்தையில் முதலீடு தேவையா ?

இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் பங்கு சந்தையில்  முதலீடு தேவையா என்பது தான் .

இது நாள் வரை ஆயிரக்கணக்கான பதிவுகள் ,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்தாலும் பலருக்கு பங்கு சந்தை பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்கிறது .

நம்முடைய அடிப்படை கல்வியிலும் சரி , பல வகை இளநிலை ,முதுநிலை கல்வியிலும் சரி இதை பற்றிய உபயோகமான தகவல் கிடைப்பதில்லை , நமக்கு தெரிந்தவர்களிடம்  கேட்டாலும்  உபயோகமானதாக இல்லை , இன்டர்நெட்டிலோ வழிகாட்டுதல் தெளிவாக இல்லை என புலம்புவர்களுக்கானது இந்த  பதிவு .

பங்கு சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றி பலரிடம் பேசினால்  நான் இத்தனை  ஆயிரங்கள் இழந்தேன் , இவ்வளவு நஷ்டம் வந்தது ,அதில் முதலீடா  என பயமுறுத்துகிறார்கள் . பங்கு சந்தை பணக்காரர்களுக்கு மட்டும் தான் , லாபம் கிடைக்கும் வழியல்ல என்ற மாயையை உருவாக்கி இருக்கிறார்கள் .

விஷயத்திற்கு வருவோம் . பங்கு சந்தை யாருக்கானது ? சுருக்கமாக சொன்னால் , அவசர தேவைக்கு இல்லாத பணத்தை முதலீடு செய்து , பொறுமையை காப்பவர்களுக்கு மட்டுமே .  புரியும் படி சொல்கிறேன் .

இன்னும் 10 ஆண்டுகளுக்கு என்னிடம் உள்ள 15 ஆயிரம் ரூபாய் எனக்கு தேவை படாது , என்னால் முதலீடு செய்யமுடியும் என்றால் ,அந்த  பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் .  இந்த தேவை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .எவ்வளவு லாபம் தரும் ? இந்த கேள்வி புதியவர்களுக்கு மட்டுமே வரும் . பங்கு சந்தை வருடத்திற்கு இவ்வளவு தான் லாபம் என்று வங்கி  பிக்ஸெட் டெபொசிட் போல வருவதில்லை . ஒரு வருடம் 15 % லாபம் கிடைக்கலாம் , ஒரு வருடம் 20 % நஷ்டம் கிடைக்கலாம் . ஆனால் 10 ஆண்டுகளில் நாம் தேர்ந்து எடுக்கும் பங்குகளை பொறுத்து 12- 15 % லாபம் கிடைக்க வழியுண்டு .அதற்குத்தான் சொன்னேன் ஒரு குறுகிய  காலத்திற்குள் [ சுமார் 3 ஆண்டுகள் ] -கல்வி ,திருமணம் , என  பணத்தை சேமித்து வைத்திருந்த பணத்தை பங்கு சந்தையில் இறக்குவது ஏற்புடையதல்ல .

பங்கு சந்தை முதலீட்டிற்கு எவ்வளவு பணம் வேண்டும் ? வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றாலும் போதுமானதே .வங்கியில் சேமிக்க புதிய கணக்கு துவக்குவது போல , பங்கு சந்தைக்கு டீமேட் என்ற கணக்கை துவக்க வேண்டும் . சில நிறுவனங்கள் முதலாம் ஆண்டிற்கு இலவசமாகவே தருகிறார்கள் .

 

நஷ்டம் அடையாமல் லாபம் கிடைக்குமா ? சென்ற பதிவில் தங்கம் பற்றி விவாதித்திருந்தேன் . தங்கம் லாபம் மட்டுமே தருமா ? தராது தானே ? நிலம் விலை குறையவே வாய்ப்பில்லை என்று விவாதிப்பவர்கள் , அந்த இடம் 4 ஆண்டுகளில் அதே  விலை விற்றாலும் நஷ்டம் தானே ?

 

பங்கு சந்தை பற்றிய ஒரு ரகசியம் கூறுகிறேன் ,  நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு , பொறுத்திருக்கும் காலம் ,இதைப்பொறுத்தே  நமக்கு லாபம் தரும் . இதில் தான் விஷயம் அடங்கி  உள்ளது . இந்த கலையை ஒரே நாளில் கற்றவர் உலகில் இல்லை .  பங்கு சந்தை பற்றிய  எண்ணத்தை மாற்ற  முதலில் கணக்கை  துவக்குங்கள் .அடுத்த நகர்வை  தொடர்வோம்  . சரிதானே ?


No comments:

Post a Comment

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...