Sunday, 25 September 2022

Panam seiyya virumbu part 3

                                               Visit Sadurangam GM Chess Academy 



முதல் இரண்டு பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்ப்புக்கு தலை வணங்குகிறேன் . இந்த ஊக்கம் மென்மேலும் சிறந்த படைப்புகளை தர வேண்டும் என  தூண்டுகிறது .

பணம் பற்றிய புரிதலின் முதல் அடியாக  செலவுகளை இரண்டு பிரிவுகளாக வைக்க சொல்லியிருந்தோம் . இந்த செயல் மூலம் ,நமக்கு  செலவுகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்துக்கொள்ள கூடியதாக உள்ளது என்ற  ஒரு உண்மை விளங்கியிருக்கும் .

செலவுகளை பற்றி விவாதிக்கும் போது கடன் அட்டைகள் என்ற (கிரெடிட் கார்டுகள் ) பற்றி கூற  வேண்டியது அவசியமாகிறது . அறிந்தோ அறியாமலோ இ .எம் . ஐ , கிரெடிட் கார்டு, தனி நபர் கடன்  ( பர்சனல் லோன் ) என்ற  மிக கூரிய வாள்கள்  நம்மிடம் வந்துவிட்டது . ஏன் அவை' வாள்கள் ' ? நம்மை பாதுகாக்கவும் முடியம் , நம்மை  அழித்து விடவும் முடியும் .

கடன் அட்டைகளை பற்றி அறிந்துகொள்ள அதன் பின்னால் ஒளிந்துள்ள வியாபாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு ஆண்டிற்கு கடன் அட்டைகள் மூலம் நடக்கும் வியாபாரம் மட்டும் பல லட்சம் கோடிகள் .

இந்த உண்மையை நம்பத்தான் வேண்டும் . நேரடியாக அவர்களுக்கு   பல வழிகளில் அவைகளுக்கு வருமானம் கிடைக்கும் தான்  . ஆனால்  , பல நுகர்வோர்கள் கடன் அட்டைகள் மூலம் பொருள் பெற்று தவணை தேதியில் காட்டாமல் , வட்டி காட்டுவதால் தான்  அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதாவது தவணை தொகையை தள்ளி கட்டுவதும் , குறிப்பிட்ட குறைந்த தொகையை கட்டுவதும் , நம்மை பெருந்தொல்லைக்கு உள்ளாக்கும் . அது கடன் அட்டை  நிறுவனங்களுக்கு பெருத்த லாபத்தை பெற்றுத்தரும் .

ஒரு பெரும் சமூகம் , கடனாளியாகி ,தூக்கம் தொலைத்து ,வாழ்விழந்து ,ஊரை மாற்றி , என பல விஷயங்களை மாற்றி வாழ்கிறார்கள் என்றால்  அது மிகை அல்ல .

சமீபத்தில் இது பற்றி ஒரு சகபயணியிடம் பேச நேர்ந்தது . அவர் 'நாடே கடன் வணங்குகிறது , இதில் நான் எம்மாத்திரம்' என்று அங்கலாய்த்துக்கொண்டார் . இது என்ன எதிர் மறைச்சிந்தனை . இவர்கள் போன்றவர்களின் சிந்தனை வீட்டையும் ,நாட்டையும்  எதிர் திசையில் இழுத்து செல்லும் என்று  சொல்லத்தான் வேண்டுமா ?

சரி செய்ய , என்ன  செய்ய வேண்டும்? எப்பாடு பட்டாலும் முதலில் கடன் அட்டைகளின் கடன்களை கட்ட வேண்டும்.  முதல் காரணம் : அதிக வட்டி- கடன் சுமை , இரண்டாவது  மன உளைச்சல் .

எப்படி கட்டலாம் ? பல வழிகள் உண்டு.

சிலவற்றை கூறுகிறேன்:

1. உங்கள் வங்கி சேமிப்பு , 2. பி .எப்   எனப்படும் வைப்பு  நிதி , 3. எல் .ஐ .சி பாலிசி  மீது கடன் , 4. அரசு சார்த்த வங்கி  நகை கடன்    ( இவை கடன் அட்டைகளை விட  குறைந்த வட்டிகள்) மேலும் இவற்றிற்கு  நம்மால்  முடிந்த அளவு கடன் தொகையை திரும்ப  கட்டலாம் . மாதம் இவ்வளவு என கட்ட வேண்டிய அவசியம் இல்லை .

 

சென்ற பாகத்தில் கேட்ட திருக்குறள் :

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

தன்னிடம் உள்ள பொருள் கொண்டு  செயல் செய்வது எப்பொழுதும்  சிறப்பானது.

தொடர்ந்து பயணிப்போம்

 

No comments:

Post a Comment

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...