Thursday, 13 October 2022

Manage your finance-6 :157 கோடி பரிசு , ஆனால் கடனாளி .

 


157 கோடி பரிசு , ஆனால் கடனாளி .

கடந்த சில நாட்களில் ,  வரவு -செலவு கணக்கு வைத்தல் - பட்ஜெட் , கடன் அட்டை , EMI - மாத  தவணை , 50-30-20 விதி  என பல விஷயங்களை பற்றி விவாதித்திருந்தோம் , அதன் தொடர்ச்சியாக உலகமே உற்று நோக்கியுள்ள ஒரு நிகழ்வை உங்களுக்கு கூறுகிறேன் .

உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீரர்கள் யார் யார் என  தேடி பார்த்தால்  இவர் பெயர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். விம்பிள்டன் போட்டி நடந்த சமயம் , தர வரிசையில் இல்லாத  ஜெர்மனியை சேர்ந்த  17 வயதே நிரம்பிய ஒருவர் ,தேர்ந்த வீரர் ஒருவருடன் விளையாடுகிறார் . தர வரிசையில் இல்லாத  ஒருவர் வெற்றி பெறுவார் என்று ,எவரும் ஊகித்திருக்க மாட்டார்கள், கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்  .ஒரு உலக சாதனை நிகழ்ந்தது . அது சமயம்,மிக இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர்   இவர் மட்டுமே . பிறகு  உலகமே இவரை தூக்கி கொண்டாட  பத்தே ஆண்டுகள், தன திறமையை மிக நேர்த்தியாக செதுக்கிக்கொள்ள  49, பட்டங்கள் வென்றார் .இவர் பெற்ற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ? தலை சுற்றி விழாதீர்கள் . 20 மில்லியன் யூரோ . நம் ரூபாய் மதிப்பில் சுமார் 157 கோடிகள் .30 வருடங்களுக்கு முன் இது மிகப்பெரிய்ய்ய  தொகை . இன்றைய மதிப்பை தெரிந்துகொள்ள 32 ஆல் பெருக்கி கொள்ளவும். யார் அந்த பெருமைக்குரிய வீரர் ? 1985- 1995 ஆண்டுகளில்  முதல்  மிக பிரபலமான நட்சத்திர வீரர்,  கண்டு பிடித்து விடீர்களா ? அவர்  போரிஸ் பேக்கர்  !

காலங்கள் உருண்டோட ,30 ஆண்டுகள் கடந்தது . பணம் ,பெயர் ,புகழ் எல்லாம் , கிடைத்து . கூடவே கடனும் சேர்ந்தது . ஏன்?, திறமைகளை வளர்த்து ,ஈட்ட  தெரிந்தவருக்கு சேர்த்த பணத்தை கையாள தெரியவில்லையே ?  என்ன ஆனது ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் , நீதிமன்றம் அவரை  திவால் ஆனதாக கூறியது . தான்  பெருமையாக , பொக்கிஷமாக வைத்துள்ள கோப்பைகளை ,ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது .

இந்த கடன் ஒரு நாளின் வந்தது இல்லை . இதுபோன்ற பேரிழப்பிற்கு  மூன்று  முக்கிய காரணிகளை  சொல்லலாம்   மிக ஆடம்பரமான வாழ்க்கைமுறை , தவறான முதலீடுகள்,  கடன் - (கடன் அட்டைகள் மூலம் வாங்கும் கடன் , வேறு சில கடன்கள் )

ஒரு புள்ளி விவரப்படி , கடந்த 7 ஆண்டுகளில்,நம் நாட்டில்  ,குடும்பம் சார்ந்த கடன்  11.3 %    உயந்துள்ளது ( 2012 ஆண்டில்   8.7 % ஆக இருந்தது ).  ,2009 ஆண்டில்   மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேமிப்பு  25 % ஆக  இருந்தது,   2018 ஆண்டில் 17 %   குறைந்து விட்டது .

இந்த மாற்றத்திற்கு என்ன காரணங்கள் ?  பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் என்ன ?  தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள் .

 

Sunday, 2 October 2022

Manage your finance: Part 5

 

இது வரை பட்ஜெட் , கிரெடிட் கார்டு (கடன் அட்டை), EMI  , போன்றவற்றை விவாதித்திருந்தோம் .

சிலருக்கு மாதத்தின்  முதல் நாளை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி இன்னும் குழப்பம் இருக்கலாம் .

. ஒரு கூட்டத்தில் உரையாற்றும் நேரம் .நான் சேமிப்பு என்றால்  என்ன என்று கேட்டேன் ? ஒரு நடுத்தர , உயர் பொறுப்பிலுள்ள அதிகாரி சற்றும் தாமதிக்காமல் 'செலவை வரவிலிருந்து கழித்தால் கிடைப்பது ' என்றார் . இப்படித்தான் பலரும் புரிந்திருக்கிறார்கள் . பொருளாதாரத்தின் ஓரு முக்கியமான ரகசியத்தை இப்போது உங்களுக்கு கூறுகிறேன் . அதாவது மாதத்தின்  முதல் நாள்  நாம் செய்ய வேண்டியது , சேமிப்பு ,முதலீடு போன்றவையே .  மீதம் உள்ள தொகையை தான் செலவு செய்யவேண்டும் .  இந்த அடிப்படை தத்துவத்தை நாம் தவற விடுவதில் தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் .

 உங்களுக்கு ஒரு 30000 ரூபாய்  வரவு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம் . அதில் செய்ய வேண்டியது  முதல் வேலையாக ரூ 6000 சேமிப்பு , மீதமுள்ள ரூ 24000 ல் , ரூ 15000 அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கானதாக இருக்கவேண்டும் . இதில் உங்களது வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கடன், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, தொலைபேசிக் கட்டணம், மருந்துகள் வாங்குவது, சமையல் சிலிண்டர் வாங்குவது மற்றும் தொலைக்காட்சிக்கான கேபிள் கட்டணம் போன்ற பயன்பாடுகளுக்கான செலவுகள், மளிகைச் சாமான்கள், அலுவலகம் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் என அனைத்து செலவுகளும் அடங்கவேண்டும் .

சரி மீதம் உள்ள ரூ 9000 ? அது உங்களுக்கானது ,உங்கள் குடும்பத்திற்கானது . உங்கள் மகிழ்ச்சிக்கானது .ஷாப்பிங், சினிமாவுக்குச் செல்வது, ஹோட்டல்களில் உணவருந்துவது, சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்வது போன்ற உங்கள் விருப்பத்துக்குரிய, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கான செலவுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த  தொகை அனைத்தையும் செலவழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இதுவே 50-30-20 விதி என்பர் . ரூ 100 ல் 50% வாழ்க்கை செலவு, 30 %  மகிழ்சிக்கு ,20 % சேமிப்பு .

இதில் முதலில் வரவேண்டியது சேமிப்பு,வாழ்க்கை செலவு , மகிழ்ச்சிக்கு செலவு . இதே  விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை , அனால் இருப்பது சிறப்பு . மேலும் சிலர் 30 % சேமிப்பு , 20 % இன்ன பிற செலவுக்கு என ஒதுக்குபவர்கள் பொருளாதார சிக்கல்களில் பெரும்பாலும் மாட்டுவதில்லை . இந்த 50-30-20 ஒரு வழி காட்டுதல்தான் . எந்த  செலவை ஏற்றினாலும் இறங்கினாலும் , 20 % சேமிப்பை குறைத்தல் ஆகாது . சிலருக்கு 55-25-20  அல்லது 45-25-30 எந்த  விகிதாச்சாரம் இயலுமோ அதை பின்பற்றவும் .நினைவில் கொள்ளவேண்டியது 20 சதவிகிதம் குறையக்கூடாதென்பதே . 20 % பணத்தை என்ன செய்வது ? வங்கியில் சேமிக்கலாமா ? வீட்டில் வைக்கலாமா ? தங்கம் வாங்கலாமா? பல கேள்விகள் . தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள் ,  விடைகள் கிடைக்கும் .மீண்டும் சந்திப்போம்

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...