157 கோடி பரிசு , ஆனால் கடனாளி .
கடந்த
சில நாட்களில் , வரவு
-செலவு கணக்கு வைத்தல் - பட்ஜெட் , கடன் அட்டை , EMI - மாத தவணை
, 50-30-20 விதி என
பல விஷயங்களை பற்றி விவாதித்திருந்தோம் , அதன் தொடர்ச்சியாக உலகமே உற்று நோக்கியுள்ள ஒரு நிகழ்வை உங்களுக்கு கூறுகிறேன் .
உலகின்
தலை சிறந்த டென்னிஸ் வீரர்கள் யார் யார் என தேடி
பார்த்தால் இவர்
பெயர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். விம்பிள்டன் போட்டி நடந்த சமயம் , தர வரிசையில் இல்லாத ஜெர்மனியை
சேர்ந்த 17 வயதே
நிரம்பிய ஒருவர் ,தேர்ந்த வீரர் ஒருவருடன் விளையாடுகிறார் . தர வரிசையில் இல்லாத ஒருவர்
வெற்றி பெறுவார் என்று ,எவரும் ஊகித்திருக்க மாட்டார்கள், கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் .ஒரு
உலக சாதனை நிகழ்ந்தது . அது சமயம்,மிக இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர் இவர்
மட்டுமே . பிறகு உலகமே
இவரை தூக்கி கொண்டாட பத்தே
ஆண்டுகள், தன திறமையை மிக
நேர்த்தியாக செதுக்கிக்கொள்ள 49, பட்டங்கள்
வென்றார் .இவர் பெற்ற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ? தலை சுற்றி விழாதீர்கள் . 20 மில்லியன் யூரோ . நம் ரூபாய் மதிப்பில் சுமார் 157 கோடிகள் .30 வருடங்களுக்கு முன் இது மிகப்பெரிய்ய்ய தொகை
. இன்றைய மதிப்பை தெரிந்துகொள்ள 32 ஆல் பெருக்கி கொள்ளவும். யார் அந்த பெருமைக்குரிய வீரர் ? 1985- 1995 ஆண்டுகளில் முதல் மிக
பிரபலமான நட்சத்திர வீரர், கண்டு
பிடித்து விடீர்களா ? அவர் போரிஸ்
பேக்கர் !
காலங்கள்
உருண்டோட ,30 ஆண்டுகள் கடந்தது . பணம் ,பெயர் ,புகழ் எல்லாம் , கிடைத்து . கூடவே கடனும் சேர்ந்தது . ஏன்?, திறமைகளை வளர்த்து ,ஈட்ட தெரிந்தவருக்கு
சேர்த்த பணத்தை கையாள தெரியவில்லையே ? என்ன
ஆனது ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் , நீதிமன்றம் அவரை திவால்
ஆனதாக கூறியது . தான் பெருமையாக
, பொக்கிஷமாக வைத்துள்ள கோப்பைகளை ,ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது .
இந்த
கடன் ஒரு நாளின் வந்தது இல்லை . இதுபோன்ற பேரிழப்பிற்கு மூன்று முக்கிய
காரணிகளை சொல்லலாம் மிக
ஆடம்பரமான வாழ்க்கைமுறை , தவறான முதலீடுகள், கடன்
- (கடன் அட்டைகள் மூலம் வாங்கும் கடன் , வேறு சில கடன்கள் )
ஒரு
புள்ளி விவரப்படி , கடந்த 7 ஆண்டுகளில்,நம் நாட்டில் ,குடும்பம்
சார்ந்த கடன் 11.3 %
உயந்துள்ளது (
2012 ஆண்டில் 8.7 % ஆக
இருந்தது ). ,2009 ஆண்டில் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில், சேமிப்பு 25 % ஆக இருந்தது, 2018 ஆண்டில்
17 % குறைந்து
விட்டது .
இந்த
மாற்றத்திற்கு என்ன காரணங்கள் ? பொருளாதார
நிபுணர்களின் கருத்துக்கள் என்ன ? தொடர்ந்து
எங்களோடு பயணம் செய்யுங்கள் .

No comments:
Post a Comment